முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
பேரணி
நாமக்கல் மாவட்டம்,திருச்செங்கோடு நகர ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையோட்டி பேரணி நடைபெற்றது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்செங்கோடு நகர ஒன்றிய அதிமுக சார்பில் பேரணி நடைபெற்றது. திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கிநான்கு ரக வீதிகள் வழியாக சென்று மீண்டும் அண்ணா சிலை அருகில் முடிவுற்ற பேரணிக்குநகர செயலாளர் அங்கமுத்து, திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக தலைமை பொது குழு உறுப்பினர் பொன் சரஸ்வதி,ஆகியோர் தலைமை வகித்தனர்.

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்லப்பன், மாவட்ட துணை செயலாளர் முருகேசன், திருச்செங்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ் ஆர் எம் டி சந்திரசேகர், தெற்கு ஒன்றிய செயலாளர் அணிமூர் மோகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வக்கீல் சந்திரசேகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழ. இராமலிங்கம், வழக்கறிஞர் அணி மாவட்ட பொருளாளர் பரணிதரன், எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், திருச்செங்கோடு நகர அம்மா பேரவை செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் கார்த்திகேயன், நகர துணை செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் ராஜவேல், முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் சபரி தங்கவேல், கூட்டுறவாளர்கள் ராமமூர்த்தி, ராகவன்,மற்றும் இளைஞர் அணி மகளிர் அணி தகவல் தொழில் நுட்ப அணி உள்ளிட்ட பல்வேறு சார்பு அணி நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story