அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் மறைவு

பூதலூர் அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் சந்திரா காலமானார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.சந்திரா ( வயது 64) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த (ஏப்.4) வியாழனன்று காலமானார். ஏ.சந்திரா கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவு காரணமாக, திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வியாழனன்று, பூதலூர் அருகே பாதிரக்குடியில் உள்ள அவரது வீட்டில் இயற்கை எய்தினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி நிர்வாகியாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக ஏற்கனவே பணியாற்றியவர். சிபிஎம் பூதலூர் வடக்கு ஒன்றியக் குழு உறுப்பினராக தனது இறுதிக் காலம் வரை செயல்பட்டவர். ஏ.சந்திராவின் கணவர் அரங்கராஜன் தியாகி என்.வி. கலைக்குழு உருவாக காரணமாக இருந்த மிகச்சிறந்த பாடகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏ.சந்திராவின் இறுதி நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், சிபிஎம் மூத்த தலைவர் என்.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், ஆர்.மனோகரன், கே.பக்கிரி சாமி, என்.வி.கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி, மற்றும் வெ.ஜீவகுமார், சா.ஜீவபாரதி, திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாவட்டச் செயற்குழு சந்திரன், மாதர் சங்க மாவட்டச் செயலர் வசந்தி, மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி மற்றும் கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள், பல்வேறு அரங்க தலைவர்கள், நிர்வாகிகள், கட்சியினர், மாதர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story