முன்னாள் அமைச்சர் அன்பழகன் நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் அமைச்சர் அன்பழகன்  நினைவு நாள் அனுசரிப்பு

அன்பழகன் நினைவு தினம் அனுசரிப்பு

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் நான்காம் ஆண்டு நினைவு நாள் தி.மு.க. கட்சி அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

நகராட்சி தலைவர் மற்றும் நகர வடக்கு செயலர் விஜய்கண்ணன் தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் சத்தியசீலன், ஜேம்ஸ், நகர பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜ்குமார், கந்தசாமி, முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் ராஜா,

விஸ்வநாதன், தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், கட்டுமான தொழிற்சங்க நிர்வக்கிஸ் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று அன்பழகன் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர்.

பங்கேற்ற அனைவரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் சேர்ந்து செயலாற்றிய அன்பழகனின் கட்சி பணிகள் குறித்து நினைவு கூர்ந்து பேசினார்கள்.

Tags

Next Story