அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பிரச்சாரம்

அரூர் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் அசோகன் மாவட்ட முழுவதும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று காலை 10 மணிக்கு அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கெலவல்லி உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட ஊராட்சிகளில் பல்வேறு கிராமங்களில் முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வு,பல்வேறு வகையில் மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக உள்ளது எனவும், மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம், பிரசவத்திற்கு ரூபாய் 18000, பள்ளி மாணவ மாணவிகளுக்கு தற்போது ஆயிரம் ரூபாய் வழங்குகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியை கொண்டு வந்த நல்ல பல திட்டங்களை எடுத்துரைத்தது, அதிமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags

Read MoreRead Less
Next Story