பாப்பிரெட்டிப்பட்டியில் திமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பிரச்சாரம்

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஆதரித்து முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தேர்தல் பிரச்சாரம்.
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பொ.மல்லாபுரம்,பொ.நடூர், B.தூரிஞ்சிப்பட்டி, பி.பள்ளிப்பட்டி, பையர்நத்தம், போதக்காடு, கதிர்புரம், மாரியம்மன் கோயில் நகர் பகுதி வாழ் மக்களிடம் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் பற்றி அண்டப் புழுகையை ஆவேசமாகப் பேசுவதே தன் தலையாய பணி என்று செயல்பட்டு வருகிறார்கள் பாமகவினர். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும், திமுக ஆட்சியில் தான் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் உட்பட பல வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ஜப்பான் நாட்டிடம் இருந்து நிதியுதவி பெற்று நடவடிக்கை எடுத்தவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தான். அனைத்து உண்மைகளும் தெரிந்த மக்களிடமும் பொய் பேசாதீர்கள். அப்படிப் பொய் பேசுவது நாகரீகமான தேர்தல் பிரச்சாரமாக இருக்காது என்று முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துக் கொண்டு திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணிக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், வணிகர்கள் என அனைவரும் பொதுமக்களிடம் தெரு தெருவாக சென்று வாக்கு சேகரித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story