சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய முன்னாள் அமைச்சர்

சங்ககிரி நகர திமுக சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி பங்கேற்று கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

சேலம் மாவட்டம், சங்ககிரி நகர திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா, மற்றும் தை நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடும் நிகழ்ச்சி சங்ககிரி நகர திமுக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்டச் செயலர் டி.எம்.செல்வகணபதி தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல்வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பூஜை செய்து சூரிய பகவானை வண்ங்கினார். பின்னர் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை கூறினார். அதனையடுத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல், கரும்பு, சுண்டல் ஆகியவைகளை வழங்கிப் பேசினார். முன்னதாக அவர் திமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தார்.

மேற்கு மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து முன்னிலையில் நடைபெற்றது. நகரச் செயலாளர் முருகன் வரவேற்றார். அப்போது பேரூராட்சி தலைவர் மணிமொழிமுருகன், பேரூராட்சித்துணைத்தலைவர் அருண்பிரபு, நகர பொருளாளர் செல்வராஜ், நிர்வாகிகள் சரவணன், அரசு வழக்குரைஞர்கள் எஸ்.கிறிஸ்டோபர், ஆர்.அருள்பிரகாஷ், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் ராஜவேலு, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சங்கர், பேரூராட்சி உறுப்பினர்கள், சின்னாகவுண்டனூர் ஊராட்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story