வடசென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம்

வடசென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம்
வடசென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

வடசென்னை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ நேற்று நான்காவது நாளாக ராயபுரம் பகுதி 49 வது வட்டத்தில் உள்ள சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பால அருணாச்சலம் தெரு, சீரங்கம்மாள் தெரு, தணிகாசலம் தெரு, சோலையப்பன் தெரு, புது தாண்டவராயன் தெரு, தாண்டவராயன் தெரு, கப்பல் போலு தெரு, லாயர் சின்னதம்பி தெரு, ஜி ஏ ரோடு, எம் சி ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும், தொடர்ந்து 50 ஆவது வட்டம் எஸ் என் தெருவில் உள்ள எம் ஜி ஆர் சிலை அருகில் இருந்து, காசி கார்டன் 3 ஆவது தெரு, ஏ ஜெ காலணி 2, 3 மற்றும் ஆவது தெரு, வாத்தியார் ஏகப்பன் தெரு, ஷேக் மேஸ்திரி தெரு, ஜீவரத்தினம் நகர் இந்திரா நகர் உள்ளிட்ட 24 பகுதிகளிலும் தொடர்ந்து, 52 ஆவது வட்டம் எம் எஸ் கோவில் தெரு, பிரிட்ஜ் வழியாக ஆடுதொட்டி, ஸ்டாலின் சுரங்கப்பாதை, சிமிட்டிரி ரோடு,மீனாட்சியம்மன் பேட்டை உள்ளிட்ட 16 பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார்.

200க்கும் மேற்பட்ட அதிமுக, எஸ் டி பி ஐ மற்றும் தேமுதிக உற்சாக இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள் என்று முழக்கங்களை எழுப்பிய படி வழியெங்கும் பூக்களை தூவிக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் வடசென்னை மாவட்ட செயலாளரும் வடசென்னை தொகுதி பொறுப்பாளருமான ஜெயக்குமார் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story