திமுகவினர் பண பட்டுவாடாவை தொடங்கி விட்டனர் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

திமுகவினர் பண பட்டுவாடாவை தொடங்கி விட்டனர் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
கேபி உதயகுமார் பேட்டி
பண பட்டுவாடா குறித்து சோதனை செய்தாலும் நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம், அண்ணாமலை மாதிரி தெருச் சண்டை போடுவதில்லை என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டியளித்தார்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர், கல்லூத்து, வெள்ளைமலைப்பட்டி உள்ளிட்ட உசிலம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலான நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்., அப்போது மக்கள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்., திமுகவில் நிற்பவர் நமது சொந்தக்காரர் தான் நமது அண்ணன் தான், மூன்று முறை எம்எல்ஏ , நாடாளுமன்ற மேல்அவை உறுப்பினராக இருந்தார்

அவர் இரட்டை இலையில் இருக்கும் வரை தங்கதமிழ்ச் செல்வன்., இப்போது உதயசூரியனுக்கு போனதிலிருந்து தகரதமிழ்ச்செல்வனா மாறிட்டீங்களே அண்ணா., இன்னொருவரும் நம்ம அண்ணன் தான் சொந்தக்காரர் தான் அவர் 14 ஆண்டுகள் உங்களை மறந்துவிட்டு, உங்களை தள்ளி வைத்துவிட்டு என்ன ஏதுனு கூட கேக்கவில்லை., ஆனால் இப்போது தனது எஞ்சிய வாழ்நாளை காப்பாற்றிக் கொள்ளவும், வழக்கிலிருந்து விடுவித்துக் கொள்வதற்காக தான் உங்களிடத்தில் வாக்கு கேட்டு வருகிறாரே தவிர உங்களை வாழ வைக்க அல்ல., என பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எப்படி தேனியில் வெற்றியை பெற்றதோ அதே போன்று 40 நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்று முதல் வெற்றியாக தேனி நாடாளுமன்ற தொகுதி வெற்றி இருக்கும்., எதிர்த்து நிற்கும் இரு வேட்பாளர்களும் இரட்டை இலையால் அடையாளம் காணப்பட்டவர்கள் இன்று சுயநலத்திற்காக தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக சுயேட்சை சின்னத்திலும், உதயசூரியன் சின்னத்திலும் நிற்கின்றார்கள் அவர்களுக்கு மக்கள் நல்ல பாடத்தை புகட்டுவார்கள்., திமுகவினர் நேற்று முதல் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் செய்திகள் வெளியாகி உள்ளது., 30 ஆயிரம் கோடியை கொள்ளையடித்து எங்கே வைப்பது என தெரியாமல் தடுமாறுவதாக பிடிஆர் பழனிவேல் ராஜன் சொன்னது இன்று உண்மையாகி உள்ளது.

2 ஜி ஊழலில் கொள்ளையடித்த பணத்தின் மூலம் அவர்கள் மக்களை சந்தித்து தேல்வியை தழுவினார்களோ அதே போன்று இன்று ஜீ ஸ்கோயரில் கொள்ளை அடித்த பணத்தின் மூலம் ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் வரை கொடுப்பார்கள் என பேசப்பட்ட நிலையில் இன்று ஒரு ஓட்டுக்கு 300 ம் 500 ம் கொடுப்பது மக்களிடத்திலே ஏமாற்றத்தை அளித்துள்ளது, மக்களுக்கு அவர்கள் கொடுக்கும் பணத்து அது மக்களின் பணம் என மக்கள் வாங்கி கொண்டு பட்டை நாமத்தை கொடுப்பார்கள், திமுக மண்ணை கவ்வுவது உறுதி., எதிர்த்து நிற்கும் பாஜக தமிழ்நாட்டில் வேலையில்லை, அதிமுக மற்றும் அனைத்து மக்களின் உரிமையை நாராயணசாமி எழுப்புவார் அதற்கு மக்கள் ஆதரவு தருவார்கள், அதிமுகவினரின் வாகனங்கள் சோதனை செய்தது குறித்த கேள்விக்கு., திமுகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.

அதனால் நாங்கள் பிரச்சாரம் செய்ய போகும் போது இடையூறு செய்கின்றனர்., நாங்களும் எல்லோ ஒத்துழைப்பும் கொடுத்து வருகிறோம்., அண்ணாமலை மாதிரி தெருச் சண்டை போடுவதில்லை தேர்தல் ஆணைத்தை மதித்து, சட்டத்தை மதித்து வருகிறோம், எத்தனை முறை மோடி பிரச்சாரம் செய்தாலும் மக்களுக்கு சேவை செய்தால் மட்டுமே மக்கள் இதயங்களில் இடம் பெற முடியும், அந்த வழியில் எம்ஜீஆர் முதல் உசிலம்பட்டியில் உள்ள நிர்வாகிகள் என அனைவரும் மக்களோடு மக்களாக இருந்து சேவை செய்கின்றன ஆகவே நாராயணசாமிக்கு வெற்றியை தருவார்கள் என பேட்டியளித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story