நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அதிமுக சார்பில் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் தலமையில் நடைபெற்ற கோடைகால நீர் மோர் பந்தலை பெண்கள் மேளதாளங்களுடன் கோலாட்டம் ஆடி துவக்கி வைக்கப்பட்டனர்.அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுமக்களுக்கு கரும்புச்சாறு செய்து கொடுத்தார் தமிழகம் முழுவதும் அக்கினி வெயில் தொடங்கி கடும் வெப்பத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில்ங்களில் அதிமுக சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற நீர் மோர் பந்தலை முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். அப்போது அந்த பகுதி பெண்கள் மேள தாளங்களுடன் உற்சாகமாக கோலாட்டம் ஆடி பொது மக்களை வர வேற்றனர் அப்போது அதிமுகவினர் நீர் மோர் கரும்பு சாறு நுங்கு இளநீர் மற்றும் பழவகைகளை அள்ளி கொடுத்தனர் இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுமக்களுக்கு கரும்புச்சாறு செய்து கொடுத்து தாகம் தீர்த்தார்.

Tags

Read MoreRead Less
Next Story