தண்ணீர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

தண்ணீர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

தண்ணீர் பந்தல் திறப்பு

புதுக்கோட்டைஅதிமுக வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் பிருந்தாவனத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

புதுக்கோட்டையில் அதிமுக வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் பிருந்தாவனத்தில் கோடைகால தண்ணீர் பந்தலை தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், வடக்கு மாவட்ட கழக செயலாளர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி யாரின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் அதிமுகவினர் கோடைகால தண்ணீர் பந்தலை திறந்த வண்ணம் உள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் பிருந்தாவனம் என்ற இடத்தில் கோடைகால தண்ணீர் பந்தலை தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் டாக்டர் .சி. விஜயபாஸ்கர் திறந்து வைத்தார் பொதுமக்களுக்கு நீர்மோர், கூல்டிரிங்ஸ், ரோஸ் மில்க், தர்பூசணி, வாழைப்பழம், நுங்கு இளநீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியினை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மாணவரணி தலைவர் ஜே. முகமது இப்ராகிம் சிறப்பாக . மேலும் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 22 ஆம் தேதி அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது மேலும் இதுவரை புதுக்கோட்டை நகர் பகுதியில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் வீதி வீதியாக தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் அதிமுக நகர தெற்கு பகுதி செயலாளர் எஸ். ஏ. எஸ். சேட்டு என்ற அப்துல் ரகுமான் வடக்கு பகுதி செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story