பூமி பூஜையில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்

பூமி பூஜையில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்

பூமி பூஜையில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்

குமாரபாளையம் அருகே நடந்த பூமி பூஜைகளில் முன்னாள் அமைச்சர் பங்கேற்றார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம், தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம் ஊராட்சியில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று, பல்லக்காபாளையத்தில் வடிகால், தட்டான்குட்டை ஊராட்சி, ஓலப்பாளையம், சத்யா நகர், காவடியான்காடு, குப்பாண்டபாளையம் ஊராட்சி செல்வம் நகர், கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால், குடிநீர் மேல்நிலைத்தொட்டி, சிமெண்ட் தரை தளம், உள்ளிட்ட பல பணிகளை, 60 லட்சம் ரூபாய் மதிப்பில் பூமி பூஜை போடப்பட்டு, கட்டுமான பணிகள் துவக்கி வைத்ததுடன் தட்டான்குட்டை ஊராட்சி சத்யா நகரில் ரேஷன் கடையை திறந்து வைத்தார். இதில் தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா, மாவட்ட உறுப்பினர் செந்தில், ஒன்றிய அ.தி.மு.க. செயலர் குமரேசன், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story