கோவில் கும்பாபிஷேக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் எம்பி

கோவில் கும்பாபிஷேக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் எம்பி

முன்னாள் எம்பி சாமி தரிசனம் 

இண்டூர் அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழாவில் செந்தில்குமார்‌ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

தர்மபுரி மாவட்டம், மற்றும் சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டத்துக்கு இண்டூர் குப்பு செட்டிபட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் திமுக தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவ செந்தில்குமார் கலந்து கொண்டார். அவருக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

மேலும் அவர்களிடம் குறும்பர் சமுதாயம் பழங்குடி பட்டியலில் சேர்க்கும் வரை தொடர்ந்து உறுதியாக பதவி இல்லாமலும் பெற்று தருவேன் என தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர்கள் சிங்காரவேல் செந்தில் சிவகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு மரியாதை செய்து சிறப்பித்தனர்.

Tags

Next Story