முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

ராஜீவ் காந்தி நினைவு தினம்

சங்ககிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தினையொட்டி சங்ககிரி, பவானி பிரதான சாலையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திறக்கு சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத்தலைவர் ச.ஜெயக்குமார் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள்பாரதப்பிரதமர் ராஜீவ்காந்தியின் உருவப்படத்திற்கு முன்பு மேற்கு மாவட்டத்தலைவர் தலைமையில் நிர்வாகிகள் பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணியம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் மணி, மாவட்ட பொதுசெயலாளர்கள் நடராஜன், ராமமூர்த்தி, காசிலிங்கம், நகரத்தலைவர் ரவி, நிர்வாகிகள் அங்கமுத்து, இஸ்மாயில், ஜெயகநாதன், குமார், வடிவேல், பரமன், மாணவர் காங்கிரஸ் நிர்வாகி அகில், இளைஞர்காங்கிரஸ் சட்டமன்றத்தலைவர் கார்த்தி, உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story