பாஜக நிர்வாகி மீது மோசடி புகார் தெரிவித்த மாஜி எஸ்.ஐ மனைவி

பாஜக நிர்வாகி மீது மோசடி புகார் தெரிவித்த மாஜி எஸ்.ஐ மனைவி

மலர்கொடி

திருப்பத்தூர் பாஜக மாவட்ட இளைஞரணி தலைவர் தன்னை ஏமாற்றி ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் எஸ்ஐயின் மனைவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். முன்னாள் சிறப்பு உதவி ஆய்வாளர். இவரது மனைவி மலர் கொடி.கோவிந்தன் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மலர்க்கொடி திருப்பத்தூர் அடுத்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் திருப்பத்தூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி தலைவராக உள்ள விவேகானந்தன் என்பவருக்கு ரூ.6 லட்சத்தை கடனாக கொடுத்துள்ளார். கடன் கொடுத்து சில வருடங்கள் கடந்தும் விவேகானந்தன் கடனை திருப்பி தராமல் காலம் தாழ்த்தியுள்ளார். இந்நிலையில் மலர்கொடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் என்னிடம் ஆறு லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு விவேகானந்தன் திருப்பி தராமல் மோசடி செய்து வருவதாக புகார் மனு அளித்தார்.

Tags

Next Story