நாகர்கோவிலில் வாக்களித்த முன்னாள் மத்திய அமைச்சர்  பொன் இராதாகிருஷ்ணன்

நாகர்கோவிலில் வாக்களித்த முன்னாள் மத்திய அமைச்சர்  பொன் இராதாகிருஷ்ணன்

வாக்களித்த பொன் ராதாகிருஷ்ணன்

பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் தனது வாக்கை பதிவு செய்தார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் 10-ம் முறையாக போட்டியிடுகிறார். அவர் இன்று நாகர்கோவில் எஸ்.எல்.பி., பள்ளிக்கூடத்தில், பூத் எண் 174 ல் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், ஓட்டுக்கு நான் பணம் கொடுக்க மாட்டேன் என்று சொன்ன ஒரே தலைவர் அண்ணாமலை எனவும், இந்த தேர்தல் மாவட்டத்தின் வளர்ச்சி பணிக்கான தேர்தல் எனவும் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

Tags

Next Story