நாராயணி பள்ளிகளின் நிறுவன தினம்: சக்தி அம்மா பங்கேற்பு!

நாராயணி பள்ளிகளின் நிறுவன தினம்: சக்தி அம்மா பங்கேற்பு!

 உயர்நிலைபிரிவு கட்டிடம் திறப்பு 

ஸ்ரீபுரம் நாராயணி பள்ளி வளாகத்தில் நாராயணி பள்ளிகளின் நிறுவன தினம் கொண்டாடப்பட்டது.

ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி வித்யாலயா மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி, ஸ்ரீநாராயணி வித்யாஷரம் மேல்நிலைப்பள்ளி நிறுவன தினம் ஸ்ரீபுரம் நாராயணி பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. ஸ்ரீநாராயணி பள்ளிகளின் இயக்குனர் எம்.சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். இதில் சக்தி அம்மா கலந்து கொண்டு ஸ்ரீநாராயணி வித்யாலயா மெட்ரிக்பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்நிலைபிரிவு கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் அவர், கதைமூலமாக மாணவர்களுக்கு நீதிநெறி வழங்கி சொற்பொழிவாற்றி ஆசி வழங்கினார். பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களையும், 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சக்தி அம்மா, தங்க நாணயம் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதி என்.செந்தில்குமார் கலந்து கொண்டு கடந்த கல்வியாண்டில் அனைத்து வகுப்பிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விருதும், ஸ்ரீநாராயணி பள்ளிகளின் இயக்குனர் எம்.சுரேஷ்பாபு மாணவர்களுக்கு சான்றிதழ், நினைவுப்பரிசும் வழங்கினர். இதில் பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், நிர்வாக அதிகாரி, ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story