அரசு மேல்நிலைப்பள்ளியில் திட்டப்பணிக்கு அடிக்கல்

அரசு மேல்நிலைப்பள்ளியில் திட்டப்பணிக்கு அடிக்கல்

திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டல்

சேலம் மாவட்டம், தெடாவூர் அரசுமேல்நிலைப்பள்ளியில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லிஅருகே தெடாவூர் பேரூராட்சியில், பள்ளி மேம்பாட்டு மானியம் 6வது நிதி குழு மானியத்தில் தெடாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை பராமரிப்பு மற்றும் கழிப்பிடம் கட்டுதல், தெற்கு மனக்காட்டில் போர்வெல் மற்றும் சின்டெக்ஸ் டேங்க் அமைத்தல், அம்பேத்கர் நகர், புதூர் பகுதியில் சமுதாய கழிப்பிடங்கள் பராமரிப்பு, தெற்கு மணக்காடு நடுத்தடம் ஏரி வாய்க்காலில் சிறிய பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது.

பேரூராட்சி தலைவர் வேல் தலைமை வகித்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் மாதேஸ்வரி, இளநிலை பொறியாளர் நடராஜன், செயல் அலுவலர் மாதவன், தலைமை ஆசி ரியர் பாலமுருகன், ஆசிரியர் ரவிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story