கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
ஆலங்குளத்தில் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம், சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு முதல்வர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அப்போது கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார், கல்லூரி முதல்வர் சின்னத்தாய், சுரண்டை நகர திமுக பொருளாளர் கணேசன் உள்ளிட்ட கல்லூரி மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story