மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா

மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா

மேல்நிலை நீர்தேக்க தொட்டி

கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞான சபை அருகே மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் நகராட்சியில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 6வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூபாய் 150 இலட்சம் மதிப்பீட்டில் சத்திய ஞான சபை வளாகம் அருகில் 4 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

Tags

Next Story