ஆலங்குளம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

ஆலங்குளம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள ஓடைமறிச்சான் கிராமத்தில் 15ஆவது நிதிக்குழு மூலம் ரூ.39.68 லட்சம் மதிப்பில் துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்தாா். ஆலங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலா் அன்பழகன், ஊராட்சித் தலைவா் பொன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டினாா். அரசு ஒப்பந்ததாரா் மணிகண்டன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சண்முகராம், சங்கீதா, மீனா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் கிருஷ்ணராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Tags

Next Story