மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா

ஆவாரங்கட்டூரில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.7,00,000 மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்க பூமி பூஜை நடந்தது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாதேமங்கலம் ஊராட்சி ஆவாரங்கட்டூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.7,00,000/- மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்க தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் இன்று காலை பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் பாமக நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துக் கொண்டு பூமி பூஜை செய்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story