சுரண்டையில் திருமண மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

சுரண்டையில் திருமண மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

அடிக்கல் நாட்டு விழா

சுரண்டையில் திருமண மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை நகராட்சியில் ரூ. 1.88 கோடியில் அமைக்கப்படவுள்ள திருமண மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. விழாவுக்கு சுரண்டை நகராட்சி ஆணையா் வெங்கடேஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சங்கராதேவி முன்னிலை வகித்தாா். தென்காசி எம்எல்ஏ பழனிநாடாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன், சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் ஆகியோா் அடிக்கல் நாட்டினா். நகராட்சிப் பொறியாளா் முகைதீன், கணக்காளா் முருகன், நகா்மன்ற உறுப்பினா்கள் பரமசிவன், பாலசுப்பிரமணியன், ராஜ்குமாா், சந்திரசேகர அருணகிரி, வேல்முத்து, சாந்தி, அம்சா பேகம், கூட்டுறவு சங்க துணைத் தலைவா் கணேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Tags

Next Story