ஒசூர் மாநகராட்சியில் அங்கன்வாடி மையம் கட்டும் பணிக்கு அடிக்கல்

ஒசூர் மாநகராட்சியில் அங்கன்வாடி மையம் கட்டும் பணிக்கு அடிக்கல்

அடிக்கல் நாட்டப்பட்ட பூஜையில் கலந்து கொண்டவர்கள் 

ஒசூர் மாநகராட்சி, இராம்நகரில் 13லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு அங்கன்வாடி மையம் கட்டும் பணிக்கு மாநகர மேயர் அடிக்கல் நாட்டினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, 24வது வார்டிற்குட்பட்ட ராம்நகர், கோட்டை மாரியம்மன் கோவில் அருகே சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான அரசு அங்கன்வாடி மையம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைப்பெற்றது

ஒசூர் மாநகராட்சி மேயர் வணக்கத்திற்குரிய S.A.சத்யா அவர்கள் அங்கன்வாடி மைய கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் அப்போது மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் மஞ்சம்மா கிரி, மாரக்கா சென்னீர், நாகராஜ்,பகுதி செயலாளர் ராமு, வட்ட செயலாளர்கள் ஜான், மோகன் பாபு மற்றும் கழக நிர்வாகிகள் கிரிராஜன், காந்தராஜ் முபினா, ஷாலினி, ராஜி ஆதி, கிருஷ்ணமூர்த்தி, தண்டபாணி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story