பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு அடிக்கல்

பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு அடிக்கல்

அடிக்கல் நாட்டு விழா 

திருநெல்வேலி மாவட்டம், உலகன்குளம் ஊராட்சியில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஒன்றியம்,உலகன்குளம் ஊராட்சியில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.7 லட்சத்தில் ஆத்தியன்குளம் கிராமத்தில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணியை சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி பூங்கோதை குமார் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாலமோன் டேவிட் தலைமை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story