பட்டமுடையார்புரத்தில் குடிநீர் தொட்டிக்கு அடிக்கல் நாட்டல்

பட்டமுடையார்புரத்தில் குடிநீர் தொட்டிக்கு அடிக்கல் நாட்டல்
பட்டமுடையார்புரத்தில் குடிநீர் தொட்டிக்கு அடிக்கல் நாட்டல்
பட்டமுடையார்புரத்தில் குடிநீர் தொட்டிக்கு அடிக்கல் நாட்டல் விழா நடந்தது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட பட்டமுடையார்புரத்தில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில், பொது நிதித்திட்டத் தின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பீட் டில் புதிதாக 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி. எம். எஸ். ராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கி. ராஜசேகர் முன்னிலை வகித்தார்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே. ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் பொன். அறிவழகன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொன் செல்வன், கோடீஸ்வரன், ஜெயசித்ரா குத்தாலிங்கம், இசக்கிராஜ், ஜாஸ்மின் யோவான், விஜிராஜன், இசக்கிமுத்து, தேவஅன்பு, சாமுவேல் துரைராஜ், சுடலைஈசன், முன்னாள் துணைத்தலைவர் தங்கச்சாமி மற்றும் யோவான், தங்கபாண்டி, ராமசாமி, அழகேசன், யேசுதாஸ் செல்லத்துரை, பால்பாண்டி, மாடசாமி, பாண்டியன், ராமராஜன், சத்தியராஜ், விநாயகப்பெருமாள், மாயாண்டி, சந்திரசேகர், பேரூராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story