செறுகோல் அரசு மருத்துவமனையில் பொது சுகாதார கட்டிடத்திற்கு அடிக்கல்

செறுகோல் அரசு மருத்துவமனையில் பொது சுகாதார கட்டிடத்திற்கு அடிக்கல்

அடிக்கல் நாட்டப்பட்டது 

செறுகோல் அரசு மருத்துவமனையில் 54,75,000 ரூபாய் பொது சுகாதார கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செறுகோல் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.இந்த மருத்துவமனையில் பொது சுகாதார கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்களும் மருத்துவர்களும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று காலை ரூபாய் 54,75,000 மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதார கட்டிடத்திற்கு அடிக்கல் மாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது திருவட்டார் ஊராட்சி மன்ற பெருந்தலைவர் ஜெகநாதன் அடிக்கல் மாட்டி பணிகளை துவங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசி, மருத்துவர் அருண் சந்தோஷ், கவுன்சிலர் ஷீபா, உதவி பொறியாளர் ஜெனி, பணி மேற்பார்வையாளர்‌ நீலாம்பரன்,மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story