மது போதையில் வாட்ச்மேனை தாக்கிய நான்கு பேர் கைது

மது போதையில் வாட்ச்மேனை தாக்கிய நான்கு பேர் கைது

 மது போதையில் வாட்ச்மேனை தாக்கிய நான்கு பேர் கைது

நாகை அருகே மது போதையில் வாட்ச்மேனை தாக்கிய நான்கு பேர் கைது
நாகை மாவட்டம் நாகூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட நரிமணம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் மகன் பாலமுருகன் வயது 40 இவர் நரிமணத்தில் உள்ள சிபிசிஎல் என்னெய் சுத்திகரிப்பு ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார் இந்த நிலையில் நரிமணம் பாலம் உத்தமசோழபுரம் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் மகன்கள் கமலேஷ் வயது 23 ராகேஷ் வயது 21 திருவாரூர் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்த ராஜா மகன் மணிகண்டன் வயது 20 நரிமணம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த செந்தில் மகன் முரளி வயது 20 ஆகிய நான்கு பேரும் மது அருந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாலமுருகன் இங்கே ஏன் மது அருந்துகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அப்போது இருதரப்பிற்கும் இடையே வாய் தவறாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கமலேஷ், ராஜேஷ், மணிகண்டன், முரளி ஆகிய நான்கு பேரும் சேர்ந்து பாலமுருகனை ஆபாசமாக திட்டி கட்டை மற்றும் கல்லால் தாக்கி உள்ளனர். மேலும் அங்கு வந்த பாலமுருகன் உறவினரின் இரு சக்கர வாகனத்தை மரித்து பிரச்சனை செய்து கொலை மேட்டர் முடித்துவிட்டு சென்றுள்ளனர். இதில் காயம் அடைந்த பாலமுருகன் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பாலமுருகன் நாகூர் காவல் நிலையத்தில் பிப்ரவரி 14 புதன்கிழமை காலை 11 மணிக்கு புகாரின் பேரில் போலீசார் கமலேஷ் ராஜேஷ் மணிகண்டன் முரளி ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Tags

Next Story