கேடிசி நகரில் வீட்டை உடைத்து திருடிய நான்கு பேர் கைது

கேடிசி நகரில் வீட்டை உடைத்து திருடிய நான்கு பேர் கைது

பைல் படம்

நெல்லை மாவட்டம் கேடிசி நகரில் வீட்டை உடைத்து திருடிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் கேடிசி நகரை சேர்ந்த பார்த்தசாரதி நேற்று முன்தினம் குடும்பத்துடன் வெளியே சென்று இருந்த பொழுது மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து 109 கிராம் தங்கம்,300 கிராம் வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். இது குறித்து பார்த்தசாரதி பாளை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு சேர்மதுரை,சஞ்சீவ்,நிராஜ், கார்த்திகேயன் ஆகிய நான்கு பேரை இன்று கைது செய்தனர்.

Tags

Next Story