தடை செய்யப்பட்ட போதைப்பொருள் வைத்திருந்த நான்கு பேர் கைது !!

தடை செய்யப்பட்ட போதைப்பொருள் வைத்திருந்த நான்கு பேர் கைது !!

கைது

தடை செய்யப்பட்ட போதைப்பொருள் 700 கிலோ குட்கா கேணிக்கரை போலீசாரால் கைப்பற்றப்பட்டது. நான்கு பேர் கைது செய்து கேணிக்கரை போலீசார் விசாரணை.

ராமநாதபுரம் மாவட்டம் பகுதிகளில் போதை பொருள் பொருள் கடத்துவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, கேணிக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இரவு ரோந்து பணிகள், வாகன சோதனைகள் தீவிர படுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் கேணிக்கரை சார்பு ஆய்வாளர் தினேஷ் தலைமையிலான போலீசார் ராமநாதபுரம் நகர பகுதியான கான்சாகிப் தெரு, நாகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனை மற்றும் தீவிர ரோந்து பணியினை நேற்று மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்ததில் சுமார் 700 கிலோ எடையில் மூடை மூடைகளாக தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலாக்கள் கைப்பற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வாகனத்தையும் அதில் இருந்த நான்கு பேரையும் கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் அனைத்து காவல்நிலையத்திற்கு இரவு நேரங்களில் வாகன சோதனைகளை தீவிரமாக ஈடுபட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தி இருக்கிறார்.

Tags

Next Story