முன்விரோதம்: தாக்கிய நான்கு பேர் கைது

முன்விரோதம்: தாக்கிய நான்கு பேர் கைது

சேரன்மகாதேவியில் முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

சேரன்மகாதேவியில் முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்தவர் சதீஷ்.இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சூர்யா என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவில் சதீஷை சூர்யா மற்றும் அவரது நண்பர்களான சிவா மற்றும் மாதவன்,தமிழ்ச்செல்வன் ஆகியோர் கல்லால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து சதீஷ் சேரன்மகாதேவி போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து போலீசார் நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story