இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் காயம்

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் காயம்

விருதுநகர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் காயம் அடைந்தனர்.

விருதுநகர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் காயம் அடைந்தனர்.
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையைச் சேர்ந்தவர் ஆதிராம் 33. இவர் மனைவி விஜயலட்சுமி 30. மகள் அபிநய ஸ்ரீ 10, மகன் ஆனந்தமுருகன் 8. இவர்கள் சத்திரரெட்டியப்பட்டியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு டூவீலரில் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் புல்லலக்கோட்டை சந்திப்பில் வந்து போது திருநெல்வேலி, சேரன்மகாதேவியைச் சேர்ந்த ஜோஷிக் 21, காரில் வந்து ஆதிராம் வந்த இருசக்கர வாகனத்தில் பின்னால் மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளார்.இதில் காயமடைந்த 4 பேரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story