இரண்டு டூ வீலர் மோதிய விபத்தில் நான்கு பேர் காயம்

இரண்டு டூ வீலர் மோதிய விபத்தில் நான்கு பேர் காயம்

போலீசார் வழக்கு பதிவு 

இரண்டு டூ வீலர் மோதிய விபத்தில் நான்கு பேர் காயம். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
தேசிய நெடுஞ்சாலையில் சூலக்கரை சாய்பாபா மஹால் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்தில் நான்கு நபர்கள் காயம் விருதுநகர் அருகே சூளக்கரை பகுதியை சார்ந்தவர் லிங்கராஜ் வயது 48 இவர் டிஎன் எஸ் டி சி இல் ஓட்டுனராக வேலை பார்த்து வருவதாகவும் கடந்தமே நான்காம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சூலக்கரை பகுதியில் இவர் சென்று கொண்டிருந்த போது அதே சாலையில் பெரியம்மா குண்டு பகுதியைச் சார்ந்த கணேசன் என்பவர் தனது மனைவி மகேஸ்வரி மற்றும் குருநாத பாண்டியன் ஆகியோரை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் லிங்கராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் லிங்கராஜ் மற்றும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கணேசன், கணேசன் ஒட்டி வந்தா இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த மகேஸ்வரி மற்றும் குருநாத பாண்டியன் ஆகிய நான்கு நபர்களும் காயம் அடைந்தனர் லிங்கராஜன் உறவினர் கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் சுலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story