வரதட்சணை கொடுமை - 4 பேர் கைது

வரதட்சணை கொடுமை - 4 பேர் கைது

வரதட்சணை கொடுமை

விழுப்புரத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கிய கணவர் உள்ளிட்ட 4 பே ர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரத்தில் வரதட்சணை கேட்டு மனை வியை தாக்கிய கணவர் உள்ளிட்ட 4 பே ர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். விழுப்புரம் வி.மருதூரை சேர்ந்தவர் பழனி மகன் அருண்காந்தி(35) எலக்ட்ரீஷியன். இவருக்கும், விக்கிரவாண்டி அடுத்த அத்தியூர் திருக்கை கிராமத்தை சேர்ந்த வினோதினி(30)என்பவருக்கும், கடந்த 2020ம் ஆண்டு, அக்டோபர் மாதம், இரு வீட்டார் ஏற்பாட்டில் திருமணம் நடந்தது. அப்போது, ஒரு லட்சம் பணம் மற்றும் சீர்வரிசை பொருள்களை, சீர்வரிசையாக பெண் வீட்டார் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், அருண்காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கூடுதலாக வரதட்சணை கேட்டு வினோதினியை மிரட்டி வந்துள்ளனர். இதே போல், கடந்த மாதம் அருண்காந்தி வரதட்சணை கேட்டு மிரட்டி, தாக்கி, வினோதினியை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இது குறித்து, வினோதினி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், அருண்காந்தி, அவரது தாயார் சிவகாமி, உறவினர்கள் பத்மாவதி, கணபதி ஆகியோர் மீது நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story