வாலிபர்களை பாட்டிலால் குத்திய 4 பேர் கைது

வாலிபர்களை பாட்டிலால் குத்திய 4 பேர் கைது

வாலிபர் மீது தாக்குதல் 

திருப்பூரில் முன்விரரோதம் காரணமாக வாலிபர்களை பாட்டிலால் குத்திய 4 பேரை திருமுருகன் பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு(வயது 25).இவருக்கும் பூண்டி வெற்றிவேல் நகரை சேர்ந்த கண்ணன் (30) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று அப்பகுதியில் ஒரு துக்க வீட்டிற்குச் சென்ற கண்ணன் தனது நண்பர்களான 15 வேலம்பாளையத்தை சேர்ந்த முத்து கார்த்திக் (22), அருண் (29), தண்ணீர் பந்தல் காலனியை சேர்ந்த ஆனந்தகுமார் (28) ஆகியோருடன் வெற்றிவேல் நகரில் உள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு சென்றார்.

அப்போது அங்கு பாபு தனது நண்பரான பிரதாபுடன் (27) வந்தார். அங்கு வைத்து கண்ணன் பழைய முன்விரோதத்தை மனதில் வைத்து கொண்டு பாபுவிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் நண்பர்களுடன் சேர்ந்து பாபு, பிரதாப் ஆகியோரை பாட்டிலால் குத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலிசார் வழக்கு பதிவு செய்து கண்ணன், முத்து கார்த்திக், அருண், ஆனந்தகுமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்...

Tags

Next Story