வாலாஜாபாத் பகுதிகளில் இரு வேறு குற்ற சம்பவங்களில் நான்கு பேர் கைது

வாலாஜாபாத் பகுதிகளில் இரு வேறு குற்ற சம்பவங்களில் நான்கு பேர் கைது

நான்கு பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஊத்துக்காடு பகுதியில், ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி என்பவர் தனது மகன் தொழில் நிமித்தமாக ஒரகடம் சென்று அங்கு பணம் பெற்றுக் கொண்டு ஆர்ப்பாக்கம் சென்று கொண்டிருக்கையில் ஊத்துக்காடு பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கி அருந்தியதால் தடுமாறிய நிலையில் இருந்துள்ளார். அவ்வழியாக வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த விக்னேஷ்வர் , வாலாஜாபாத்தை சேர்ந்த பிரபாகர், விக்கி ஆகிய மூவரும் இவரது போதை நிலைமையை சாதகமாக்கிக் கொண்டு அவரை மிரட்டி அவர் வைத்திருந்த இருபது ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து கொண்டு தப்பி ஓடி உள்ளனர். இதுகுறித்து வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் காவல் ஆய்வாளர் பிரபாகர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டதில் மேற்கண்ட மூவரும் என்பது தெரிந்த நிலையில் அவர்களில் விக்னேஸ்வர் மற்றும் பிரபாகரை கைது செய்தனர்.இத்தகவல் அறிந்த விக்கி தலைமறைவாகியுள்ளார். இவர்கள் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tags

Next Story