பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது !

தேவேந்திர நகர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது.ரூ. 150 பறிமுதல். காவல்துறை நடவடிக்கை.
கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூது ஆடுவதாக காவல் உதவி ஆய்வாளர் தமிழ்செல்வனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், பிப்ரவரி 24ஆம் தேதி மாலை 5 மணி அளவில், வெள்ளியணை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அருகில் உள்ள தேவேந்திர நகர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட வெள்ளியணை வடக்கு தெருவை சேர்ந்த மதுரை வீரன், வேலுச்சாமி, தேவேந்திர நகரை சேர்ந்த ஆசை தம்பி, ஆனந்த் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும் ரூ.150 பறிமுதல் செய்தனர். பின்னர் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பின்னர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags

Next Story