பெட்டிக்கடையில் மது பானங்கள் விற்பனை செய்த நான்கு பேர் கைது

பெரும்பாலை அருகே பெட்டிக்கடை மற்றும் சந்துக்கடைகளில் மதுபானங்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பாலை சுற்றுவட்டார பகுதிகளில் சந்துக் கடைகளில் மதுபாட்டில்கள் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பெரும்பாலை காவலர்கள் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கொம்பாடியூரில் பெட்டிக்கடையில் மதுபாட் டில் பதுக்கி விற்ற ராமச்சந்திரன் என்பவரை காவலர்கள் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 21 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல அரகாசன அள்ளியை சேர்ந்த சின்னதுரை,அனுமந்தபுரம் செல்வம், சுரேஷ் ஆகியோர் பெட்டிக்கடைகளில் மதுபாட் டில்கள் பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் காவலர்கள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன

Tags

Next Story