மணல் கடத்திய நான்கு பேர் கைது

மணல் கடத்திய நான்கு பேர் கைது

கைது

திருவெண்ணை நல்லூர் பகுதியில்அனுமதி இன்றி மணல் கடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டார்கள்.
விழுப்புரம் எஸ்.பி. தீபக் சிவாச் உத்தரவின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் புதன்கிழமை சரவணப்பாக்கம் சந்திப்பு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.அப்போது, திருவெண்ணெய்நல்லூா் டி.புதுப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த அன்பழகன் மகன் அசோக் (33), கணேசன் மகன் பாண்டியன் (26), ஜெயபால் மகன் செந்தமிழ்ச்செல்வன் (30), அன்பழகன் மகன் அரசு (26) ஆகியோா் உரிய அனுமதியின்றி மாட்டு வாண்டிகளில் ஆற்று மணல் கடத்திச் சென்றது தெரியவந்தது.இதையடுத்து, திருவெண்ணெய்நல்லூா் போலிசார் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து, மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 4 மாட்டு வாண்டிகளையும் மணலுடன் பறிமுதல் செய்தனா்.

Tags

Next Story