சாராயம் விற்ற 4 பேர் கைது

சாராயம் விற்ற 4 பேர் கைது

கோப்பு படம்

தலைவாசல் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் தலைமையில் போலீசார் சிறுவாச்சூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சாராயம் விற்றதாக கிருஷ்ணகுமார் (வயது 28), நீதிபதி (39) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 140 லிட்டர் சாராயம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் மணி விழுந்தான் காலனி பகுதியில் சாராயம் விற்றதாக மாதேஸ்வரன் (60), கோவிந்தம் பாளையம் பகுதியில் சாராயம் விற்றதாக செல்லதுரை (52) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 120 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story