சாட்டியகுடியில் ஆட்டோ கவிழ்ந்து நான்கு மாணவர்கள் காயம்

சாட்டியகுடியில் ஆட்டோ கவிழ்ந்து நான்கு மாணவர்கள் காயம்

கவிழ்ந்த ஆட்டோ

நாகை மாவட்டம் சாட்டியகுடியில் நேற்று பள்ளி குழந்தைகள் சென்ற பாசஞ்சர் ஆட்டோ கவிழ்ந்து நான்கு மாணவ மாணவிகள் காயம் அடைந்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த சாட்டியக்குடி சிவன் கோயில் அருகில் நேற்று மாலை தேவூரில் உள்ள தனியார் ( Infant Jesus) மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 7 மாணவ, மாணவிகள் நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டிற்குகீரங்குடியை சேர்ந்த தனபால் என்பவர் ஓட்டிச் சென்ற ஆட்டோவில் சென்றுள்ளனர்.

அப்போது சாட்டியகுடி அருகே. ஆட்டோ சென்றபோது திடீரென சாலை ஓரத்தில் ஆட்டோ கவிழ்ந்தது அப்போது ஆட்டோவில் சென்றகீரக்குடியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் ரித்விக் (14, ) கீழ கண்ணாப்பூரை சேர்ந்த 4ம் வகுப்பு மாணவர் ஆதேஷ் (9) மூன்றாம் வகுப்பு மாணவி ஜெனிஷா (8) இரண்டாம் மாணவர் ஜெனிவா ஜோயல் (7) ஆகிய நான்கு பேருக்கு லேசான காயமடைந்தனர்.

நான்கு பேரையும் தேவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர் இதுகுறித்து வலிவலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

Tags

Next Story