வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்காமல் மோசடி - பெண் மீது வழக்குப்பதிவு

வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்காமல் மோசடி - பெண் மீது வழக்குப்பதிவு

பெண் மீது வழக்குப்பதிவு 

விழுப்புரம் சித்தேரிக்கரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வர் ஆறுமுகம் மனைவி வத்சலா (வயது 39). இவரிடம் சித்தேரிக்கரை சலாமத் நகரை சேர்ந்த ஏகலிங்கம் மனைவி நித்யா என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை கடனாக வாங்கியிருந்தார். பலமுறை வத்சலா அந்த தொகையை திருப்பித்தரும்படி கேட்டும் இதுநாள் வரையிலும் அந்த கடனை நித்யா திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது, இதுகுறித்து வத்சலா, விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் நித்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story