வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி- தி.மு.க பிரமுகர் கைது

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி-  தி.மு.க பிரமுகர் கைது

ராஜா 

வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடி
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கொழும்பு செட்டியார் தெருவை சேர்நதவர் லட்சுமணன்(35). தி.மு.க. பிரமுகரான இவர் கிருஷ்ணாபுரத்தில் ஜெராக்ஸ் மற்றும் கணினி மூலம் ஜாப் ஒர்க் செய்து கொடுக்கும் கடை நடத்தி வருகிறார். இவர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் மற்றும் பாலமுருகன் ஆகியோரிடம் அரசு பணியில் வேலை பெற்று தருவதாக கூறி தலா ரூ.8 லட்சமும், சித்ரா என்பவரிடம் ரூ. 4 லட்சமும் வாங்கி கொண்டு அவர்கள் 3 பேருக்கும் தமிழக அரசு வேலையில் சேருவதற்கான பணி நியமன ஆணையை கொடுத்துள்ளார். ஆனால் அவ்வாறு கொடுக்கப்பட்ட ஆணைகள் போலியானது என்பது அவர்கள் வேலைக்கு சேர சென்ற இடங்களில் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தார்.

Tags

Next Story