போலீஸ் போல் நடித்து பெண் டாக்டரிடம் நூதன முறையில் பணம் மோசடி !

போலீஸ் போல் நடித்து பெண் டாக்டரிடம் நூதன முறையில் பணம் மோசடி !

பணம் மோசடி

மும்பை போலீஸ் போல் நடித்து பெண் டாக்டரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் திவ்யா (வயது 33). இவருக்கு கடந்த 24-ந் தேதி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்தபோத அதில் எதிர்முனையில் பேசிய நபர் திவ்யாவிடம், உங்களது ஆதார் எண்ணை வைத்து ஒருவர் சிம்கார்டு வாங்கியதாகவும், அதை வைத்து செல்போன் மூலம் 25 பெண்களுக்கு ஆபாசபடங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், இதுதொடர்பாக மும்பை சாந்தாகுரூஸ் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளதாகவும் கூறினார். அதன்பின்னர் சாந்தாகுரூஸ் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் பேசுவதாக கூறி ஒருவர் பேசியுள்ளார். அந்த நபர், 2 மணிநேரத்துக்குள் மும்பையில் உள்ள காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்றும் இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் உங்கள் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண் முடக்கப்பட்டு விடும் என்றும் கூறியுள்ளார்.மேலும் செல்போனுக்கு வரும் வீடியோ அழைப்பை எடுத்துப் பேசும் படியும் கூறியுள்ளார் இதை எடுத்து திவ்யா செல்போனுக்கு வந்த வீடியோ அழைப்பை எடுத்து பேசினார், எதிர்முனையில் மும்பை போலீசின் சீருடை அணிந்தபடி பேசிய நபர் உங்களது செல்போன் என்னை வைத்து ஒருவர் மும்பையில் உள்ள ஒரு வங்கியில் கணக்குத் தொடங்கியுள்ளதாகவும் அந்த வங்கிக் கணக்கு மொபைல் பெரிய பண மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட தகவல் அந்த வங்கி கணக்கில் இருந்து ஆறு கோடி பண பரிமாற்றம் நடந்துள்ளது கூறினார் இது தொடர்பாக உங்களுக்கு ஜாமனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்தப் பிரச்சினைகள் இருந்து வெளிவர தான் சொல்லும் வங்கி கணக்கில் ரூபாய் 11 லட்சத்தை பிணித்தொகையாக அனுப்பி வைக்கும்படி கூறினார் பிரச்சினை முழுவதும் அந்த தொகையை திருப்பி கொடுக்கப்படும் என்றும் கூறினார் இதை நம்பிய திவ்யா ரூபாய் 11 லட்சத்தை அந்த வங்கி கணக்கிற்கு அனுப்பினார். அந்த நபரை செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டு பேச முயன்றபோது அவர் பதிலளிக்கவில்லை இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த திவ்யா இது குறித்து திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உம்மை போலீஸ்கூல் நடித்து பெண் மருத்துவரிடம் நூதன முறையில் மோசடி செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story