வேலை தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.7.73 லட்சம் மோசடி

வேலை தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.7.73 லட்சம் மோசடி

போலீசார் விசாரணை 

சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு குறித்து அவரது செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஒரு தகவல் வந்தது. அதனை படித்து பார்த்த அவர் ஓட்டலில் மறு ஆய்வு வேலையை தேர்வு செய்தார். பின்னர் டெலிகிராம் மூலம் சிலர் அவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பணியை தொடர வேண்டும் என்றால் பணத்தை முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனை உண்மை என்று நம்பிய அவர் 7 தவணைகளில் மொத்தம் ரூ.7 லட்சத்து 73 ஆயிரத்து 560-ஐ முதலீடு செய்தார். அதன்பிறகு அவர்கள் மீண்டும் பணத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டனர். இதனால் ஏமாற்றம் அடைந்த அவர், இந்த மோசடி குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story