முத்துப்பேட்டை அருகே வெளிநாட்டிற்கு அனுப்புவதாக மோசடி

முத்துப்பேட்டை அருகே வெளிநாட்டிற்கு அனுப்புவதாக மோசடி

கோப்பு படம் 

முத்துப்பேட்டை அருகே வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பெண்ணிடம் ரூபாய் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வீரமணி .இவரது மனைவி மணிமாலா . இவர் தனது மகன் வெளிநாடு செல்வதற்காக கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த முகமது ஜக்கரியா அவரது மனைவி கஜா பேகம் மகன்கள் பந்தல் முகமது, பதர்முகமது ஆகியோர்களிடம் 1இலட்சத்து நாற்பதாயிரதம் ரூபாய் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக் கொண்ட ஜக்கரியா குடும்பத்தினர் மணிமாலா மகனை வெளிநாட்டிற்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி மோசடி செய்துள்ளனர். இது குறித்து மணிமாலா முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சகோதரர்களான பந்தல் முகமது, பதர்முகமது ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய முகமது ஜக்கரியா அவரது மனைவி கஜா பேகம் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story