சிவகங்கையில் ஆன்லைன் மூலம் மோசடி

சிவகங்கையில் ஆன்லைன் மூலம் மோசடி

பாதிக்கப்பட்டவர்


ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்வதாக மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே சோழபுரத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் ஆன்லைனில் வந்த விளம்பரத்தை நம்பி சிவகாசியில் உள்ள லக்கி கிராக்கர்ஸ் எனும் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் தெரிவித்தபடி கூகுள்-பே மூலம் ரூபாய் 17 ஆயிரத்து 317ஐ அனுப்பியுள்ளார். பணத்தை செலுத்திய நிலையில் பட்டாசை அனுப்பாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது‌.

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது அவர்கள் சுவிட்ச் ஆப் செய்துள்ளனர். இதனை தொடர்த்து அவர் நேரில் சென்று அப்போது அந்த முகவரியில் நிறுவனம் எதுவும் இல்லை என்று எற தெரியவந்த நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இச்சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story