கோடிகணக்கில் மோசடி: பெண் கவுன்சிலர் கைது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியின் 12 வது வார்டு சுயேட்சை கவுன்சிலராக இருப்பவர் சசிரேகா. இவருடைய கணவர் சதீஷ் . இவர் மோகனூர் திமுக பேரூர் செயலாளர் செல்லவேல் (எ) செல்லப்பன்னிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாகவும்,குறைந்த வட்டிக்கு அரசியல்வாதிகளிடம் பல கோடி பணம் பெற்று தருவதாகவும் ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து தொழில் செய்வதாகவும் கூறி நம்ப வைத்து சுமார் இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பணத்தை வீட்டில் வந்து பெற்று மோசடி செய்தாக நாமக்கல் மாவட்ட குற்ற பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் 12-வது வார்டு கவுன்சிலர் சசிரேகா மற்றும் அவருடைய கணவர் சதீஷ்க்கு மாவட்ட குற்றப்பிரிவிலிருந்து பலமுறை சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக கணவன்,மனைவி இருவரும் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று நகர மன்ற கூட்டத்திற்கு சசிரேகா கையெழுத்து போட வருவதை அறிந்த குற்றப்பிரிவு போலீசார் நகராட்சியில் நடைபெற்றுக் கொண்டிருந்த நகர மன்ற கூட்டத்திற்குள் புகுந்து 12.வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் சசி ரேகாவை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளது தற்போது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இதுபோல் தமிழக முழுவதும் முக்கிய அரசியல்வாதிகளிடம் பல கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாகவும், வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகவும், புகார் வந்ததைத் தொடர்ந்து போலீசார் கிடக்கு பிடி விசாரணையை தொடங்கியுள்ளனர். கவுன்சிலர் சசிரேகா - பின் கணவன் சதீஷ் தலைமறைவாக உள்ளதால் அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட குற்ற பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story