மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

செய்யாறு தொகுதியில் உள்ள பள்ளிகளில் 298 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளை எம்எல்ஏ ஓ ஜோதி வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொருக்கை, வாழ்குடை,செங்காடு, கோவிலூர், அனக்காவூர்,புரிசை உள்ளி பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு பயின்று வரும் 298 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை செய்யாறு எம் எல் ஏ ஓ ஜோதி வழங்கினார். உடன் மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஓன்றிய செயலாளர் ஞானவேல், ரவிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள்,திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story