பார்சல் அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி - பெ.இராமலிங்கம் எம்.எல்.ஏ வழங்கினார்

பார்சல் அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி - பெ.இராமலிங்கம் எம்.எல்.ஏ வழங்கினார்

பார்சல் அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி - பெ.இராமலிங்கம் எம்.எல்.ஏ வழங்கினார்

பார்சல் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி - பெ.இராமலிங்கம் எம்.எல்.ஏ வழங்கினார்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் பார்சல் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2023 2024 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் கலந்து கொண்டு 41 மாணவர்கள், 45 மாணவிகளுக்கு என மொத்தம் 86 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் புதுச்சத்திரம் ஒன்றிய திமுக செயலாளர் எம்.பி.கௌதம் (வடக்கு), ஜெயப்பிரகாஷ் (தெற்கு), ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராம்குமார், பாபு, மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், செயலாளர், பொருளாளர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story