மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

பழைய ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் 120 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி வழங்கினார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி, பள்ளியின் தலைமை ஆசிரியை விஜி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் காமாட்சி, வேதியல் துறை முதுகலை ஆசிரியர் யோகரத்தினம், இருபால் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, இந்த பள்ளியில் பயிலும் 120 மாணவ- மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Tags

Next Story